காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும்...
இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக்...
துயரம், நினைவுகள், காதல் – இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் ‘கடலை’ உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப்...
உலகின் மகத்தான படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான...
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால்...
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவ மான புனைக்கதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்க மாக, மனதைத் தொடும் வகையில் மற்றொரு நாவல் வந்ததில்லை. கிரீஷ்...
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்ணின் மனதை வாசித்தறிந்த கலைஞர் விபூதிபூஷண். அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிப்படுத்துகிறது. தாவரங்களும்...
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான தரம்பால் மகாத்மா காந்தியின் மனவெழுச்சிகளையும் சிந்தனைகளையும் குறித்து முக்கியமான சில பார்வைகளை முன்வைக்கிறார். தன் எட்டாம் வயதில் தகப்பனாருடன் சென்று...
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. எர்னெஸ்ட் ஹெமிங்வே: எர்னெஸ்ட் ஹெமிங்வே (1899 - 1961) அமெரிக்க இல்லினாய் மாநிலத்தில் பிறந்தார். இளவயதிலேயே பேனாவையும் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். முதல் உலகப் போரின்போது செஞ்சிலுவை சங்கத்தில் சேர்ந்து இத்தாலி சென்று பல விபத்துக்களில் சிக்கி அதிசயமாக உயிர்தப்பினார். செய்தி நிருபராக ஐரோப்பா முழுவதும் சுற்றினார். மாட்டுச் சண்டை, வேட்டையாடுதல், ஆழ்கடல் மீன்பிடிப்பு, குத்துச்சண்டை போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன் அவற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதினார். இரண்டாம் உலகப் போரின்போது போர்முனைகளில் முன்னணியில் நின்று செய்திகள் சேகரித்தார். அமெரிக்காவுக்காக உளவு பார்த்தார். ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆப்பிரிக்கா என்று நிறைய சுற்றினார். நான்கு முறை திருமணம் செய்துகொண்டார். 1954இல் ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. For Whom the Bell Tolls, A Farewell to Arms, The Sun Also Rises, The Old Man and the Sea போன்ற நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. 1961இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்....
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள்...
மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள்...