செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள்’…
பரவலாக தாஜ் மகால், பல்வேறு கட்டிடக்கலைகள் பல்வேறு கோயில்களைப் பற்றியெல்லாம் பல கவிஞர்கள் எழுதுகிறார்கள். நம் கவிஞர் பொதுத்துறை தொழிற்சாலைகளைப்பற்றி எழுதுகிறார். அதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்திய சமூகத்தில் தொழிலாளர்களை பொருளாதார கட்டுமானத்தோடு மட்டும் பொருத்திவிட முடியாது, தொழிற்சாலைகளுக்குக் கூட ஓரு சமூக வரலாறு இருக்கிறது. கனரக தொழிலாளர்களுக்கு பதில் கிராமப்புற கை தொழிலுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் காந்தியார். ஆனால் கிராமப்புற கைத் தொழில்கள், ஆண்டாண்டு காலமாய் தாழ்த்தபட்டு ஓடுக்கப்பட்ட மக்களை மேலும் அதே கிராமிய சூழ்நிலையிலேயே அழுத்தி விடக்கூடும் என்று கவலைபப்பட்டார் மாமேதை அம்பேத்கர். தொழிற்சாலைகளின் மூலமே அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளரும். அவை மக்களிடையே ஊடுருவும். நகர்ப்புறங்கள் கிராமிய சாதிய ஓடுக்குமுறைக்கெல்லாம் மாற்றாக அமையும் என்றார்.எனவேதான் தொழிற்சாலைகள் மற்றுமின்றி தொழிலாளர் உரிமைகளுக்கும் பல முன்னுரிமைகளை ஏற்ப்படுத்தினார். எட்டு மணிநேரம் உழைப்பு எட்டு மணிநேரம் ஓய்வு எட்டு மணிக்கு உறக்கம் என்ற சட்டம் கூட அம்பேத்தகரால் கொண்டுவரப்பட்டதுதான்.
இன்னும் எழுதலாம், எனினும் மறுதாம்புக் கவிதைகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் மறுதாம்புக் கவிதைகளை வாசிக்கலாம், வாசித்துவிட்டு ரசிக்கலாம், சிந்திக்கலாம் , கோபப்படலாம் , ஏன் பல குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து நம்மை நாமே மாற்ற முயற்சி செய்யலாம். நல்ல படைப்பு எனவே பாராட்டலாம்.
‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன. .நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம்.
கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு வளர்ந்து, ஒரு பக்கக் கதைகள், அரைப்பக்கக் கதைகள் ஆகி, இன்றைக்கு ‘ட்விட்டர் கதைகள்’ ஆகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது அதன் வீரியமிக்க பாய்ச்சலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தலைமுறையில் பலரும் அறிந்திராத, படித்திராத அரிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை, கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப்பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஓர் வாயிலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம்.
ஆசிரியர் குறிப்பு, நிழற்படம், படைப்புகள் பங்குபெற்ற இதழின் படங்கள், கதைகளின் கதை, சிறுகதைகள் கொண்ட ஆய்வு நூல்.