ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும்....
வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில்...
கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது;...
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்”...
அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும்...
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன்...
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள் பலவும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின்...
தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் 1944’, ‘இந்தியா 1948’ என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட படைப்பு. அசோகமித்திரனின் விருப்பப்படி இரண்டு...
அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல். நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப் பற்று மிளிரும் கரிசனத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள...
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் தாண்டியும் பயணிக்கிறது. சமகாலத்து நிகழ்வுகளுக்கான மனிதர்களின்...
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக்...
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும்...