கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது...
இந்தத் தொகுப்பு அசோகமித்திரன் எனும் மேதையின் கடல் போன்ற எழுத்துப் பரப்பின் கரையில் சிலர் இணைந்து எடுத்திருக்கும் ஒரு கைப்பிடி மணல். 2014ஆம் ஆண்டு ஜுன் 7 அன்று நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற...
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும்...
சுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு இந்நூல். தனது முந்தைய ஐந்து தொகுப்புகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வீச்சுடன் முன்னேறிச் சென்றிருக்கும் சுகிர்தராணி ‘இப்படிக்கு ஏவா’ளில் உச்சத்தை எட்டியிருக்கிறார். அதைவிடவும் அதிஉச்சத்தை எட்டும் கவிதைகள் வரக்கூடும் என்ற நன்னம்பிக்கையையும்...
இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தைவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள் மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்த நாவல்...
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு...
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.
1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர். பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். அப்போதே ‘புதுசு’...
#Metoo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள் அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல...
‘உம்மத்’, இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து...
சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின்...