இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 எழுதப்பட்டவை. கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன. அவரது முந்தைய தொகுப்புகளான மண்டை ஓடி, போயாக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக்கொண்டுள்ளன. விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன. அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகிறது.