பிரமிளா அதிகமாக எழுதுபவர் இல்லை. ஒவ்வொரு கதைக்கும் கால இடைவெளி எடுத்துக் கொள்பவர். அல்லிராணியே கடைசிக்கதையாக இருக்க வேண்டும், எனில் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது.
வார்த்தை சிக்கனம் இவரது பெரும்பாலான கதைகளில் கையாளப்பட்டிருக்கும். வாசகர் விஸ்தரித்துக் கொள்ள இடைவெளிகளை வேண்டுமென்றே கதைகளில் விட்டிருப்பார்.
இந்தத் தொகுப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகச்சிறப்பான அறிமுகமாக இருக்கும். சில மணிநேரம் விரும்பித் தொலையலாம் இந்தக் கதைகளில்.