அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரும் எஞ்சி நிற்கும் கவிதைகளைக் கல்வெட்டில் செதுக்க ஆரம்பித்தால் பூமியின் மலைகள் அனைத்தையும் பெயர்த்தாகவேண்டும். எவற்றுடனும் ஒப்பிடமுடியாத அந்தப் பெருவெளியில் இந்நூலும் ஒரு தேக்கரண்டி இனிப்பு. கரையருகே மிதக்கவிடப்படும் தீபத்தைக் காற்றின் திசைக்கு அனுப்புவதற்காகக் கொஞ்சம் கைகளால் அலைகளை உருவாக்கும் சிறு முயற்சி இக்கவிதைகள்