தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல...
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. அத்தகைய கதைகளில் சிலவற்றை மீள்பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம். மகாபாரதப் பாத்திரங்களைத் தமது கதையாடல்களுக்கேற்ப உருமாற்றும் இந்தப் பிரதிகள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. வியாச பாரதத்தில் காணப்படும் சில நிகழ்வுகளின் மாறுபட்ட பிரதிபலிப்பாக வெளிப்படுத்தியும் கட்டுடைப்புச் செய்து உருமாற்றியும் காவிய மாந்தர்களை எதிர்கொள்கின்றன. நாட்டார் வழக்காற்றியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா. பெருமாளின் கள ஆய்வுகளும் வாசிப்பனுபவமும் இந்நூலின் ஆதார வலுவாக விளங்குகின்றன.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற நாட்டார் கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது...
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல்...
தமிழ்ப் பனை ஓலைகள் அச்சில் வர ஆரம்பித்த காலத்திலேயே தமிழ்மொழி, பண்பாடு, காலம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்த ஆராய்ச்சியாளர்களில் பலர் சாதாரணமாய் வாழ்ந்தவர்கள். வறுமை, நோயால் தாக்கப்பட்டவர்களும் உண்டு. இவற்றைத் தாண்டி தமிழ்...
நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன்...