சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே...
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார். ‘மோனத்தவம்’ என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில்...
எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 வரை சுந்தர ராமசாமி எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த இக்கதைகள் வாசிக்க எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமும்...
எழுத்தைத் தன் இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்ட சுந்தர ராமசாமி, பேச்சிலும் தனது படைப்பாளுமையையும் சிந்தனை வீச்சையும் வெளிப்படுத்தியவர். ஐம்பதாண்டுகளுக்கு மேல் எழுதிய அவர் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. 1987...
சுந்தர ராமசாமி தன்னைப் பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு கலைஞனின் சமரசமற்ற நோக்கிலேயே தான் பெற்ற அனுபவத்தையும் அறிவையும்...
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப்படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’...
சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள்...
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன....
சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா....
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது. 8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின்...
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்’. 1975இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய மூன்று...
சுந்தர ராமசாமி (1931 – 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல்...