பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒரு பக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன.
தூத்துக்குடி, திருக்குறுங்குடி, மணப்பாடு, பூவந்தி, மேலப்பாளையம், பூதப்பாண்டி, கழுகுமலை, சிங்கிகுளம், பேகம்பூர் எனப் பல திசைகளில் இருந்து சதுக்கை (ஜங்சன்) எனும் தாமிரபரணியின் தீரவாசத்திற்கு மனித உறவுகளை அழைத்து வந்து குன்னிமுத்து மாலை கையில் கொடுத்து ஆடவிட்டு, அவர்கள் விளையாட அதன் வாயிலாக கண்டடையும் நீலகண்டம் நகரம் தான் அரம்பை கதை.
இது அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றின் மீது சுமத்தப்படும் கற்பனை முயற்சி.