மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து...