உலகு தழுவிய பெண்ணினத் தின் மிக முக்கியப் பகுதியாக ஆப்கன் பெண்களின் வரலாற்றை, வலிகளை, குரலை, பார்வையை, வாழ் நிலையை அவர்களின் மொழியிலேயே தமிழில் முதன் முதலாகப் பதிகிற நூல் இது. லண்டாய் எனும் வாய்மொழி வடிவத்தையும் தமிழுக்கு முதலாவ தாக அறிமுகப் படுத்துகிறது.எத்திசையிலுமான அடக்கு முறைகளை எதிர்த்து வீரியமிக்க கவிதைகளை உருவாக்குகிறார்கள் பெண்கள், படைப்பாளி யாரெனத் தெரிந்தால் உயிர் பறிக்கப்படும் சூழலிலும், உயிரைத் துச்சமென மதித்து தங்களது படைப்புகளுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.