பரவலாக தாஜ் மகால், பல்வேறு கட்டிடக்கலைகள் பல்வேறு கோயில்களைப் பற்றியெல்லாம் பல கவிஞர்கள் எழுதுகிறார்கள். நம் கவிஞர் பொதுத்துறை தொழிற்சாலைகளைப்பற்றி எழுதுகிறார். அதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்திய சமூகத்தில் தொழிலாளர்களை பொருளாதார கட்டுமானத்தோடு மட்டும் பொருத்திவிட முடியாது, தொழிற்சாலைகளுக்குக் கூட ஓரு சமூக வரலாறு இருக்கிறது. கனரக தொழிலாளர்களுக்கு பதில் கிராமப்புற கை தொழிலுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் காந்தியார். ஆனால் கிராமப்புற கைத் தொழில்கள், ஆண்டாண்டு காலமாய் தாழ்த்தபட்டு ஓடுக்கப்பட்ட மக்களை மேலும் அதே கிராமிய சூழ்நிலையிலேயே அழுத்தி விடக்கூடும் என்று கவலைபப்பட்டார் மாமேதை அம்பேத்கர். தொழிற்சாலைகளின் மூலமே அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளரும். அவை மக்களிடையே ஊடுருவும். நகர்ப்புறங்கள் கிராமிய சாதிய ஓடுக்குமுறைக்கெல்லாம் மாற்றாக அமையும் என்றார்.எனவேதான் தொழிற்சாலைகள் மற்றுமின்றி தொழிலாளர் உரிமைகளுக்கும் பல முன்னுரிமைகளை ஏற்ப்படுத்தினார். எட்டு மணிநேரம் உழைப்பு எட்டு மணிநேரம் ஓய்வு எட்டு மணிக்கு உறக்கம் என்ற சட்டம் கூட அம்பேத்தகரால் கொண்டுவரப்பட்டதுதான்.
இன்னும் எழுதலாம், எனினும் மறுதாம்புக் கவிதைகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் மறுதாம்புக் கவிதைகளை வாசிக்கலாம், வாசித்துவிட்டு ரசிக்கலாம், சிந்திக்கலாம் , கோபப்படலாம் , ஏன் பல குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து நம்மை நாமே மாற்ற முயற்சி செய்யலாம். நல்ல படைப்பு எனவே பாராட்டலாம்.