ஒட்டுமொத்தத்தில் 67 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கதைப்புத்தகமல்ல, கதைகளைப்பற்றிய அருமையான புத்தகம். கதைகளின் அவசியத்தையும், கதை சொல்லும் முறைகளையும் எளிய மொழியில் அருகிலிருந்து ஒரு நண்பன் உரையாடுவது போல இந்நூல் விளக்குகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நிறைய அனுபவப் பகிர்தல்கள், நிறைய கதை சொல்லும் முறைகள் ஆகியவை உள்ளன.