தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா? கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ்வளவு எளிமையாக இருக்க போகிறது. கணிதம் ஏன் குழந்தைகளுக்கு கடினமாக காட்சி தருகிறது? நல்லவராய் இருப்பது தனி பண்பா? இத்தனையும் மிக எளிமையாக, மிக விரிவாக, மிக ஆழமாக சிறார்களின் மொழியில் விளக்குகிறது இந்நூல். ஒரு விதத்தில் இது பெரியவர்களுக்கான நூலும் கூட.