பிராணிகளையும் இயற்கையின் எழிலாகவும் கொடையாகவுமே நோக்குகிறார் ப்யாட்ரிக்ஸ். பிராணிகளோடு இயற்கையும் ஒரு பாத்திரமாகக் கதைகளில் வருவதைக் கவனிக்கலாம். பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது. அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை சரவணன் பார்த்தசாரதியின் இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்.