இயற்கையின் படைப்புகளில் மிக உயர்ந்த உயிரினம் மனிதன். ஆனால் இயற்கையில் கடைசியாக உருவானவனும் மனிதன் தான். ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பேராசையினால் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். அப்படி ஒரு மலைக்கிராமத்தில் காட்டை அழித்து செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் யானைகளைக் கொன்று த்ந்தங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்யவும் துணிகிற ஒரு அரசியல் வாதியின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறாள் ஒரு சின்னஞ்சிறு பெண்.