இந்நூலின் தலைப்புக் கதையான ‘மாயாவின் பொம்மை’ கதையில் ஒரு மாயம் நிகழ்கின்றது. இரவில் மாயாவின் அருகில் படுக்க வைத்திருந்த பொம்மையை எங்குமே காணோம். பொம்மை மாயமாக எங்கு மறைந்து போனது? ஒரு நாள் திடீரென்று யாரோ அழும் சத்தம், மாயாவுக்குக் கேட்கிறது. யார் அழுதார்கள்? ஏன் அழுதார்கள்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள இக்கதைப் புத்தகத்தை வாங்கிச் சிறுவர்க்கு வாசிக்கக் கொடுங்கள்.