உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?” யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத் தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணமானவை அல்ல, மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்திரக் கால்கள் தானே…! மந்திரக் கால்கள் மட்டுமல்ல, நினைத்தால் இறகுகளாக மாறிவிடுகின்ற கால்கள். அழகான கதையை ஒருவர் கேட்டுவிட்டால், அந்தக் கதை அவரிடம் மட்டும் இருப்பதில்லை. அவர்களின் நாக்கு வழியே பறந்து மற்றவர்களிடம் சென்றுவிடுகிறது.