கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் எனச் செய்திகளை சுவைபட அடுக்கிக்கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்துப் பூமாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக்கட்டுவது போல.. வாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள். கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிப்போட்டுவிடுவார்கள். ஆனால் அதை எழுத்தாக்கும் திறன் சிலரிடம்தான் உள்ளது. கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய உள்ளது – பொன்னீலன்