எர்ரெர்ரனி தெலங்கானா ஒரு உரையாடல்” என்ற தலைப்பில் க.மாதவ் எழுதிய நூல், சிந்தன் புக்ஸ் வெளியீடு. 400 பக்கங்கள், விலை ரூ.250. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாதவ், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். முன்னதாக “குதர்க்கம் விவாதிக்கப்படாதவை விவாதிக்க” என்ற நூலை வெளியிட்டது அவர் நீக்கப்பட்டதற்கான பல காரணங்களில் ஒன்று. தான் நீக்கப்பட்டதன்பால் எழுந்த நினைவலைகளை அசைபோட்டவாறே, நாம் ஏன் தோழர்.பி.எஸ் உடன் உரையாடக் கூடாது என்ற ஆவலுடன், தன்னுள் எழுந்த பல்வேறு கேள்விகளை, அவரின் ஆன்மாவின் மனசாட்சியை உலுக்கும் கேள்விகளை இந்நூல் வாயிலாக முன் வைக்கின்றார். அதனுடாக, “வரலாற்றில் முதன்முதலாய பெண்களைத் துப்பாக்கிகளை ஏந்தச் செய்து படையில் நிறுத்திய வீர காவியமாம், வீரத் தெலுங்கானா” போராட்டம் தோன்றி, தொடர்ந்து நடந்து, தோல்வியில் முடிந்த முழு வரலாற்றை தியாகம், சோகம், வீரம், துரோகம் உள்ளிட்ட உண்மைச் செய்திகளுடன் பதிவு செய்து நூலை நிறைவு செய்திருக்கின்றார் மாதவ்.