பண்டைய கடல் பயணிகளின் கப்பலைக் கவிழ்க்கும் கடல் பூதம், அழிந்துவிட்டது என்று நினைத்தால் ஃபீனிக்ஸ் பறவையாகத் திரும்ப வந்த மீன், சிறுபிள்ளைகளின் கனவுகளில்கூடப் புகுந்து எல்லோரையும் அலறவிட்ட கடல் மிருகங்களின் புனைவும் நிஜமும், அரசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மட்டுமே சாப்பிடலாம் என்று அந்தஸ்தின் அடையாளமாக இருந்த கடல் உணவு, சர்வதேச உறவில் விரிசல்கள் ஏற்படுத்திய ஒற்றை மீன் என்று விதவிதமான கடல் உயிரினங்களை முன்வைத்து இந்நூலின் வழியே நாம் கடலை அணுகப்போகிறோம். அறிவியலாளர்கள், மீனவர்கள், அரசர்கள், உலக நாடுகளின் அதிபர்கள், அருங்காட்சியகப் பணியாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கடற்பயணிகள் என்று பலருக்கும் இந்தக் கதைகளில் பங்குண்டு. எல்லாப் பயணங்களும் ஏதோ ஒரு இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பார்கள். இந்நூலில் நம் பயணம் நார்வேயிலிருந்து தொடங்குகிறது…