அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்படு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன் உறைந்தது , ஏன் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை? அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து, இருப்பதை ருசி பார்க்காமல் வாய்க்குள் தள்ளி , அவசர அவசரமாக கிளம்பி, நான்கு தெருக்கள் நடந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, கூட்டம் பிதுக்கித் தள்ளும் பேருந்துக்குள், மனித நாற்றம் துளைக்க பயணித்து, பணியிடம் சென்று , வெறுப்பான வேலையைப் பார்க்கும் , அலுப்பான வாழ்க்கை கொண்ட விஷயமாக காதலை அணுகுகையில் ஒருவேளை அது நமக்கு அணுக்கமாகுமா?