இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைகளாக இதழ்களில் பிரசுரமானவை. இவை யாவும் என் படைப்புகள் நீங்கலாக என்னுடைய தளத்தில் இயங்கும் சக எழுத்தாளர்களைக் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகளாகும். ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதறகும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த அசாதாரண கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ஒரு துரும்பின் அசைவு, எறும்பின் ஊர்தல், இலையின் சலனம் கூட படைப்பாளியின் உன்னத கவன ஈர்ப்பைப் பெற்றுவிடும். – கீரனூர் ஜாகிர் ராஜா