தமிழகம் நன்கறிந்த சூழலியலாளர், ‘யானைகள் அழியும் பேருயிர்’, ‘பாம்பு என்றால்?’, ‘அதோ அந்தப் பறவை போல’ போன்ற நூல்களின் வழியே பரவலான கவனம் பெற்றவர் ச.முகமது அலி. ‘காட்டுயிர் இதழின் ஆசிரியரான இவரது எழுத்தில் வெளிவரும் மற்றுமொரு பறவையியல் நூல்நூலிலிருந்து… ‘எஞ்சிப் பிழைத்திருக்கின்றதா? இல்லை அழிந்துவிட்டதா? என்ற சந்தேகத்திற்குள் 85 ஆண்டுகாலம் இருந்துவந்த, உலகின் அரிய பறவை இனங்களில் ஒன்றான ‘இருவரிக் காடை என்ற பறவையைத் தேடி அலைந்த பறவை நிபுணர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் திரட்டிய செய்திகளும் நம் நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளாகும்.