உஸ்தாத் ஹசன் அல்- பன்னா சரியாக மரணித்து 66 வருடங்கள் பூர்த்தியாகின்றது.ஷெய்க் ஹசன் அல்- பன்னா என்ற தனிமனிதனின் வாழ்வும் மரணமும் நாம் சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய ஒரு சாமான்யனின் வாழ்வும் மரணமும் அல்ல.ஒரு போராட்டத்தின், சிந்தனை முறைமையின்,இஸ்லாமிய தஹ்வாவின் உலகளாவிய எழுச்சி பரிமாணத்தின் வரலாறு அது.இறைதூதரின் மரணத்தின் பின் இஸ்லாம் ஒரு நாகரிக திட்டமாக எழுந்து 1924 இல் அரசியல் ரீதியாக பின்வாங்கிய காலப் பிரிவை இஸ்லாமிய வரலாற்றின் ஒரு பெரும் பகுதி என்றால் ஹசன் அல்- பன்னா அவர்கள் உருவாக்கிய இஹ்வானுல் முஸ்லீமூன் இயக்கத்தின் எழுச்சியும் பரவலும் பின் செப்டம்பர் காலத்துக்கு பின்னரான அதன் வீழ்ச்சி வரையில் இன்னொரு பகுதி எனலாம்.நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு ஷெய்க் பன்னா மற்றும் இஹ்வான் இயக்கம் அளித்துள்ள பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. சிந்தனை,செயல்பாடுகள்,நலத் திட்டங்கள், காலனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு (முறைபடுத்தப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட) என்று இஹ்வான்கள் கால்பதிக்காத விடயங்களே இல்லை எனலாம். ஷெய்க் கஸ்ஸாலி, யூசுப் கர்ளாவி,செய்யித் குத்ப், முஸ்தபா சிபாஈ, செய்யித் சாபிக் போன்ற மாபெரும் அறிவுப் பொக்கிஷங்களை இஹ்வான் இயக்கமே உருவாக்கியது.
உலக அமைதி ஏற்பட, மக்களை இஸ்லாமிய ஒழுங்கின்பால் வழிகாட்டுவதும் அதனை நோக்கி மக்களை அழைப்பதுமே ஒரே வழி என்ற இலட்சியத்தை முன் வைத்து உழைக்கும் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் நிறுவனர் இமாம் ஹசன் அல் பன்னா அவர்களின் உரைகளின் தொகுப்பு.
அல் இஹ்வானுல் முஸ்லிமூன்