கேரளத்தின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகையை மையப்பொருளாக எடுத்துக் கொண்டு விவாதிக்கிறது இந்நூல். கேரளா ஓணம் பண்டிகையில் தொடங்கி தமிழகத்தின் வெவ்வேறு காலத்தில் நிலவிய, வெவ்வேறு இடங்களின்/ மரபுகளின் வழியாக ஊடறுத்துச் சென்று ஒரு முடிவை எட்டியுள்ளது. இதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் பார்வையை ஆய்வு அணுகுமுறையாக இந்நூல் வரித்துக்கொண்டுள்ளது.