சொற்கள் ஜீவன் பெறுகின்றன, ஜீவித்தது யாவுமே மேலே பறக்க எத்தனிக்கின்றன. என் தாள்களில் ஒட்டியிருக்கின்ற எழுத்துகள் குறுகிய காலங்கள் கொண்டவை தான், ஆனால் அது அவளால் மாறியது.
என்னைச் சபித்தவற்றை நினைவு கூறி, என்னை எப்போதும் முத்தமிட ஈர்க்கும் அந்த ஆபரணங்களற்ற
கழுத்துத் தொண்டையிலிருந்து எழும்சொற்கள். ஓசைகளைவிட மேலான வடிவில் – மொழியைக் கடந்த ஒன்றை மேலெழுப்பும், அது உயிர்கொண்டது. அதை நான் மொழியால் வீழ்த்தும்போது கதையாய் ஜனிக்கிறது.
இதில் இருக்கின்ற பிரச்சனை ஒன்றே ஒன்று தான் அவை கீழே விழும் போது நான் மிகச்சரியாக தாளில் ஏந்திட வேண்டும்.
– ஜீவ கரிகாலன்