பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு வளர்ச்சியின் ஆதாரமாகவும் அறிவியல் கண்டு பிடிப்புகளின் அவசியமாகவும் விளங்குகின்றன.