மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ‘அறிதல் முறைகளை’ சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின.
இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களைக் கூர்மையாக்கியது.