கடல் பழங்குடி வாழ்வின்
அடிப்படைத் தகுதி விழிப்புநிலை.
ஒரு பழங்குடி மனிதன்
வேட்டைக் களத்தில் தன் முழு
உடலையும் புலன்களாக்கிக்
கொள்கிறான். களத்தில்
தன்னைத் தற்காத்துக்கொண்டு
சிறந்த வேட்டைப்
பெறுமதிகளுடன் குடிலுக்குத்
திரும்புகிறான். கடலைப்
பொழுதுகளின், சாட்சிகளின்,
ஒலிகளின், வாசனைகளின்
வரைபடமாய் காணக்
கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி
மூச்சுவரை கடலின் மாணவனாக
வாழ்கிறான். ‘விழிப்புநிலை
தவறிவிட்டால் பழங்குடி வாழ்வு
பொருளற்றுப் போய்விடும்’.