இந்து வகுப்புவாதத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்த்து வரலாறு காணாத வகையிலான போராட்டங்கள், எதிர்ப்பியக்கங்கள், கிளர்ச்சிகள் தொடர்வது நம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் வகுப்புவாதத்தை முறியடித்தல் உரக்கக் கூச்சலிடுவதால் மட்டும் முடியாது. அதை கருத்தியலாக எதிர்கொள்ள வேண்டும். நேரடி எதிர்ப்பியக்கங்கிளில் ஈடுபடுபவர்களை கருத்தியலாக ஆயுதபாணியாக்க வேண்டும். அதற்கான சிறு பங்கிளிப்பாக இந்த நூல் அமையும் என நம்புகிறோம்.