இந்திய இலக்கிய மூல நூல்கள் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. நன்கு திட்டமிடப்பட்டு, களஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி புதிய கோணங்களை அறிமுகம் செய்துவைக்கிறது. இந்தியவியலில் ஆர்வமுள்ள அனைவர் மனதிலும் எழத்தக்க முக்கியமான கேள்விகளை எழுப்பி, பகுத்தாய்ந்து, தீர்த்தும் வைக்கிறார் பேராசிரியர் கோசாம்பி. கோசாம்பி தன்னுடைய இந்த ஆய்வில் தொல்லியல், இனவரைவியல், வரலாற்றாய்வியல் போன்ற துறைகளில் நிலவும் ஆராய்ச்சி அணுகுமுறைகளைப் பிரயோகித்திருப்பது நூலின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.