மேலப்பாளையம் முஸ்லிம் என்ற பொது அடையாளத்திற்குள் மட்டும் இவர்கள் அனைவரையும் அடைத்து விட முடியாது
அரபு நாடுகளில் இருந்து வந்து வணிகம் சார்ந்து குடியேறியவர்கள்
பல்வேறு சமூக அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம் ஆனவர்கள் ,
திருமண உறவுகளை சில பகுதிகளில் தங்கள் ஊரிலேயே உறவுகள் உடன் மட்டுமே வைத்து கொள்வதும் உண்டு
அந்த வகையில் மேலப்பாளையம் மட்டும் அல்ல அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை போன்ற நகரங்களில் கூட சொந்த ஊரில் மட்டுமே பெண் கொடுத்து எடுக்கும் வழக்கம் உண்டு
காலப்போக்கில் இன்று இந்த விதி சற்று தளர்ந்து இருக்கலாம்
ஒவ்வொரு ஊரின் வரலாறும் தனித் தனி சுவையான வரலாறு ஆகும்
அந்த வகையில் மேலப்பாளையம் முஸ்லீம்கள் என்ற இந்த நூலை தோழர் பே. சாந்தி சுவையாக எழுதி உள்ளார்