புரட்சிக்கு முன் ஜார் நிக்கோலஸ் ஆட்சியின் போர்க்கால சூழல், நடைபெற்ற ஊழல்கள், ஜாரின் மனைவி அரசியல் விவகாரங்களில் தலையீடு, அவரை மிரட்டி அரண்மனையில் இருந்து கொண்டு தன் செயல்களை நிறைவேற்றிக்கொண்ட ரஸ்புடீன் என்ற போக்கிரி என ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பு இருந்த சூழ்நிலை பற்றி விவரிக்கிறது முதல் பகுதி. இரண்டாவது பகுதியில் ரஷ்யப்புரட்சியைப் பற்றியும்; அதில் லெனினுடைய இடத்தையும் பற்றியும் இதே போல புதிய தகவல்களை கொண்டு விவரிக்கிறது இந்த நூல். ரஷ்யப்புரட்சி என்பது லெனினுடைய வாழ்க்கையின் மகத்தான சாதனை. அந்த புரட்சியையும் அதில் லெனினுடைய இடத்தையும் மதிப்பிடு செய்கிறது இந்த நூல்.