முன்னாள் ‘தி ஹிந்து’ துணை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் #சிறையில்_எனது_நாட்கள் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் சுருக்கம்:
அடுத்த தடவை ஓர் அமைச்சரோ அல்லது அரசியல்வாதியோ, ஒரு போலீஸ்காரரோ அல்லது படைவீரரோ, ஓர் அதிகாரியோ, நீதிபதியோ, ஏன், ஒரு பத்திரிகையாளரோ என்னிடம் வந்து சட்டத்தின் ஆட்சியை நான் கவனத்தில் எடுக்கிறேன் என்று சொன்னால், என்னிடம் இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் உள்ளன : இஃப்கிகார் ஜீலானி.
இந்தப் புத்தகம் சொல்லும் அதிர்ச்சியான விடயங்கள் சலன புத்தியுடைய, கொடுங்கோன்மையான அதிகாரத்தையோ, அல்லது இந்திய அரசின் மானக்கேடான செயல்களையோ மட்டும் குற்றஞ்சாட்டிடவில்லை. ஒரு சமூகத்தின் தூண்கள் என்று கருதப்படும் – பத்திரிகைத்துறை என்ற நான்காவது தூண் உட்பட – அனைத்தும் எப்படி ஓர் அநியாயமான செயலுக்கு அணி சேர்ந்துகொண்டன என்பதன் தொகுப்புதான் இந்நூல்.