பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்கள்? பசுமாமிசம் சாப்பிடத் தொடங்கிய போதுதான் தீண்டாமை என்பது ஏற்பட்டதா? இக்கேள்விகள் அனைத்திற்கும் டாக்டர் அம்பேத்கர் விடை அளிக்கிறார்.