கார்ல் மார்க்ஸ் ஒரு மாமேதை அவருடைய ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சியை இந்நூல் ஆராய்கின்றது. சோவியத் சமூகவியலாளருமான பேராசிரியர் ஹென்றி வோல்கவ் இந்நூலில் கார்ல் மார்க்சின் இளமைப் பருவத்தைச் சுவைபட வர்ணிக்கின்றார். பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான போர் முழக்கத்தை, உலகத்தை மாற்றியமைக்கின்ற விஞ்ஞான தத்துவத்தை சமூகத்தை ஆராய்கின்ற இயக்கவியல் பொருள் முதல்வாத முறையை மார்க்ஸ் எப்படி தேடிக் கண்டுபிடித்தார் என்பதை விரிவாக ஆராய்கிறார். இந்நூல் இளம் வாசகர்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது. இது மார்க்சியத்துக்கு ஓர் அறிமுகம்.