ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந்த காலத்தின் வார்ப்பு அவர். அவரது சாதனைகள் தவறுகளைவிட பல மடங்கு பெரிது. அவர் மாமனிதர். இதனை நிறுவுகிறது இந்நூல். அப்பன் ஆங்கிலத்தில் எழுதியதை மயிலை பாலு தமிழாக்கம் செய்திருக்கிறார். ஸ்டா லின் வாழ்ந்த காலத்தோடு உரசிப்பார்த்து எழுதப்பட்ட நூல். இன்றைக்கும் படிக்க வேண்டிய நூல் வரிசையில் இடம் பெறும் தன்மையுடையதாகத் திகழ்கிறது. – தீக்கதிர்