மலையாளத்தில் எழுதப்பட்டவைகளில் மிகவும் அசாதாரணமான ஒரு சுய சரிதையாகவே நான் வினயாவின் இந்த நூலைப் பார்க்கிறேன், சுய சரி தைகள், பொதுவாகவே முதியோர்களின் வேள்விப் பணியாக இருக்கும் நிலையில் இதை எழுதியவர் முப்பதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளம் வயதுப் பெண் என்பதுவும் அந்த அசாதாரணத் தன்மைகளில் முக்கியமானது. வினயாவின் இந்தப் புத்தகத்தின் மையப்புள்ளியான மற்றொரு விசேஷ அம்சம்: ஒரு மலையாளிப் பெண், பெண்ணிய தரிசனங்களோடு வெளிப்படையாக எழுதும் முதல் ஆன்மவிசாரணைப் புத்தகம் என்பது. – சக்கரியா