வாஸ்கோடாகாமா மலபார் கரையை வந்தடைந்த போதே இந்தியாவில் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போரை மலபார் மாப்பிளா முஸ்லிம்கள் துவங்கினர்.
ஒருபுறம் மாப்பிள்ளாக்கள் ஒரே நேரத்தில் அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், மறுபுறம் மலபாரில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் விடுதலைக்காகவும் போராட்டம் என அவர்களின் வாழ்வே போராட்டத்திலும் தியாகத்திலும் கழிந்தன. வீரமரணம் அடைவதை போரின் ஒரு மரபாக தங்களின் கலாச்சாரமாக பின்பற்றிய சமூகமாக மாப்பிள்ளாக்கள் இருந்தனர். அவர்களின் போராட்டம் பல நூற்றாண்டுகளை கடந்தும் நடைபெற்றது. மாப்பிள்ளாக்களின் வரலாறு, வீரம், தியாகம் குறித்த ஆதாரபூர்வமான முழு ஆய்வே இந்நூலாகும்