தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்திய கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களை தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வாணிப நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள ஆவணக் காப்பகங்களிலுள்ள ஐரோப்பியரின் வணிக பதிவேடுகள் கூறும் செய்திகளை கொண்டு உருவான முனைவர் பட்ட ஆய்வுரையான (Maritime history of the corormandel muslims) என்ற நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில செய்திகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன.