இந்திய சுதந்திர போராட்டத்தில் தங்களின் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்த முஸ்லிம்களின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது, மறைக்கப்பட்ட வரலாறுகளை மக்கள் மன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கும் மிகப் பெரும் முயற்சியாக இலக்கியச்சோலையின் சுதந்திரப் போராட்ட வரலாற்று நூல் வரிசையில் முதல் நூலாக வெளியிடப்பட்ட நூல்
“விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் ”
“விஷப் பாம்புகளை விடக் கொடியவர்களாக அன்னியனாக முஸ்லிம்கள் பகைவர்களால் சித்தரிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் இச்சமுயதாயத்தின் தன்மானத்தை, கௌரவத்தை, தேசப்பற்றை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டும் மகத்தான சமுதாயப் பணியின் சாதனை இந்த நூல்”
– அபுல் ஹஸன் ஷாதலி, ஜமாத்துல் உலமா