“ரஷ்யப் புரட்சி குறித்து ஏற்கெனவே ஏராளமான படைப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றில் பல மிகவும் மெச்சத் தக்கவை. கவனமான ஆய்வின் விளைவுதான் (எனது) இந் நூல் எனினும், இதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளோ அல்லது விவரிக்கப்பட்டுள்ள பேச்சுகளோ வரலாற்று நூல்களில் ஏற்கெனவே இடம்பெறாதவையல்ல. இந் நூல் எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அல்லது அதன் கருப்பொருள் பற்றிய அனைத்தையும் அறிந்த துறை வல்லுநரால் எழுதப்பட்டதோ அன்று. மாறாக, மாநிலத்தோர் அனைவரிடமும் மலைப்பையும், திகைப்பையும் ஒருசேர ஏற்படுத்திய புரட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அது கிளப்பிய பேரொலியின் தாளச் சந்தத்தில் தாமும் கலந்து கரைந்து போகவும் ஆர்வத்துடன் காத்துக் கிடப்போருக்கு சுருக்கமானதோர் அறிமுகவுரைதான் இது.