ஆனால் அப்போது நான் எனது பதினைந்தாவது வயதை அடைந்தேன். அது ஒரு அடிமைப் பெண்ணின் வாழ்க்கையில் துயரமான பருவம். எனது எஜமான் என் காதுகளில் கெட்ட வார்த்தைகளை கிசு கிசிக்கத் தொடங்கினான். என் இளமையும், அவற்றின் தாக்கத்தையும் என்னால் புறக்கணிக்க முடியவில்லை… ஒவ்வொரு திருப்பத்திலும் என் எஜமான் எதிர்ப்பட்டான். ஒவ்வொரு சந்திப்பிலும் நான் அவனுடைய உடமை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தான். பூமியின் மீது, சொர்க்கத்தின் மீது ஆணையிட்டு, அவனுடன் என்னை படுக்க வற்புறுத்தி பணிய வைப்பேன் என்றான். நாளெல்லாம் முதுகொடிய உழைத்து, நல்ல காற்று சுவாசிக்க வெளியே சென்றால், அவனுடைய கால்கள் என்னை நாயாட்டம் தேடி வரும். எனது தாயை புதைத்த இடத்தில் நான்
மண்டியிட்டால், அங்கும் அவனுடைய கருநிழல் என்னை ஆக்கிரமிக்க என்மீது விழும். எனக்கு இயற்கை வழங்கிய இளகிய மனம், அது துன்பம் நிறைந்து பெரும் பாரமாகி விட்டது…