சேப்பியன்ஸ்’ நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?