புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் “Asura- Tale of the vanquished” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”. – இயக்குநர் ராம்