சிக்மண்ட் பிராய்டின் உளவியல் படி ஆணின் ஒவ்வொரு அசைவும், எதிர் முனை பெண்ணை கவருவதற்காகத்தான். அதே போவத்தான் பெண்ணும்… இது நியதி, நீங்கள் இந்த உலகில் பார்க்கும் ஒவ்வொரு பொருள், கலை,
கட்டிடம், எழுந்து, எல்லாவற்றிற்கும் பின்னால் காமம் தான் உள்ளது. ஊடுருவல் நாவலின் நாயகன் மனோவும் இந்த ரகம் தான், இந்த நியதி புரியாமல் அல்லாடும் ஒரு ஜீவன். விஜய் மகேந்திரனின் நாவல் படிப்பதற்கு கணவன் மனைவிக்கும் இடையே நடங்கும் கதை போல ஏதோ மேலோட்டமாக சுகம் போல தோன்றும்.ஆனால் நன்றாக கவனித்தால் ஆண் பெண் காம உளவியல் கட்டமைப்பை மிக நன்றாக ஊன்றிக் கவனித்துக் கதை போல் விஜய் மகேந்திரன் விவரித்துள்ளார். ஆண் பெண் மன அறையின் அந்தரங்க விசும்பல்களை வார்த்தைப்படுத்தியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் ஆழமானதொரு மனப்பக்கத்தை ஊடுருவல் நாவல் தொட்டுச் செல்கிறது