குறிப்பாக, இங்கே உள்ள ஈழ அகதிகள் முகாம்களில் வாழும் ஒவ்வொருவருக்கு பின்னாலும், துயரம் நிறைந்த பயணக்கதையும் மனதை அறுக்கும் சோகச்சுமையும் கனன்றுகொண்டே இருக்கும்.
சொந்தமண்ணோடு சுதந்திரமிழந்த அவர்களின் சொல்லுக்குள் அடங்காத துயரச் சொல்லலை பலமுறை தூக்கமிழந்து கொட்டக்கொட்டக் நெஞ்சுகனக்க இரவுகள்தோறும் கேட்டிருக்கிறோம்
இவை ஏதாவது ஒரு படைப்பாய் வந்தால்.. ஒரு ஆவணமாக, ஏதிலி இலக்கிய வகைமையாக, காலம் கடந்து நின்று பேசும் என்று நினைத்ததுண்டு..அதை ஏதிலி என்ற நாவலாக கொண்டுவந்திருக்கிறார் முகாமில் வாழ்ந்த அ சி விஜிதரன்