ரொம்ப ரிலாக்சா படிக்கலாம்.. ஈசாக் அய்யப்பன்.. சூசை முருகன்.. பேரு படிச்சப்பவே லேசான சிரிப்பு ஆரம்பமாச்சு.. கதையோட ஹீரோ சூசை.. 23 வயசுல காலேஜ் போறாரு.. எங்கெங்கயோ அலைஞ்சு கடைசியா ஒரு காலேஜ்ல viscom படிக்கிறாரு.. தலைவரோட அலும்பு.. அட்டகாசம்.. இதெல்லாம் தான் கதை.. முதல் அத்தியாயத்திலயே சிரிப்பு ஆரம்பமாயிடுது.. மேனேஜ்மென்ட் அண்ட் கண்ட்ரோல் ஆஃப் ஸ்ட்ரே டாக்ஸ்ன்ற தலைப்புல டாகுமெண்ட்ரி பண்றதுக்கு நாயைத்தேடி அலைஞ்சு அது மேட்டர் பண்றப்ப அதை பக்காவா வீடியோ எடுக்கறப்ப ஒரு பாட்டி வந்து கசகசனு திட்றதும் ரெகார்ட் ஆகி அதை vivaல சப்மிட் பண்றப்ப டே இதெல்லாம் எப்படிரா செட் பண்ணி எடுத்தேன்னு கேக்கறப்ப பயங்கர ஹியூமர் அந்த இடத்துல… ஒரு ஒரு அத்தியாயத்திலயும் தலைப்பெல்லாம் வேற லெவல்.. எலக்ட்ரானிக்ஸ் விஞ்ஞானியின் எட்டுத்தொகை… வேதாளத்தின் விவிலிய வாசிப்பு.. டெட்லி இம்போசிஷனும் டெலிகேட் பொசிஷனும்.. தலைவிரித்தாடிய தமிழ்த்தாய்கள்.. உயிரை நக்கிய உயிரெழுத்துக்கள்…?? முழுக்க குமரி மாவட்டத்து வட்டார வழக்குதான்.. நான் ரொம்ப சிரிச்சது வசம்பு வாயனின் வசவுகள் அத்தியாயம்.. பங்கம் பண்ணிருக்கிங்க.. வாழ்க்கை ரொம்ப சாதாரணமானதுதான்.. நாமதான் கடினப்படுத்திருக்கோம்ன்றதை போற போக்குல சொல்லிருக்காரு… கடைசியா சூசையா வர்ரது இந்த புத்தகம் எழுதுனவர்தான்.. பயங்கரம் பண்ணிருக்கிங்க.. அதே காலேஜ்க்கு சீஃப் கெஸ்டா போற அளவுக்கு பெரிய அளவு வளந்திருக்கிங்க.. வாழ்த்துக்கள்.. படிங்க.? – எழில்மதி மு ❤️